states

img

உ.பி.யில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி  

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ்-டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  

டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரப்பிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதி பின்னர் அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

;